யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் – நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ரஜினி மற்றும் கமல் இருவரும் யாருக்கு ஆதரவு என்று, அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நடிகர் சங்க கட்டடத்தின் திறப்பு விழா நிச்சயமாக இந்த வருடம் நடைபெறும் என்றும், அனைத்து துறைகளை போலவே சினிமாவிலும் வெற்றி தோல்வி என்பது உள்ளது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.