எனது ஆடி காரை அபகரிக்க முயற்சித்தார்கள் நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்

  • ரெட்டி டைரி படத்தின் பைனான்சியர் சுப்பிரமணியம் நடிகை ஸ்ரீ ரெட்டியை அவரின் அடியாட்களை வைத்து மிரட்டி ஸ்ரீ ரெட்டியின்  ஆடி காரை பறிக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.
  • மேலும் இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு காவல்நிலையத்தில்  ஸ்ரீரெட்டி புகாரளித்துள்ளார். மேலும் ஸ்ரீரெட்டி தன்னிடம்  பைனான்சியர் சுப்ரமணி தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் புகார் அளித்துள்ளார்.

நடிகை ஸ்ரீரெட்டி கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. இந்நிலையில்  ஸ்ரீ ரெட்டி  தற்போது சென்னையில் தங்கி தற்போது பல தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்  தற்போது ரெட்டி டைரி படத்தின் பைனான்சியர் சுப்பிரமணியம் நடிகை ஸ்ரீ ரெட்டியை அவரின் அடியாட்களை வைத்து மிரட்டி ஸ்ரீ ரெட்டியின்  ஆடி காரை பறிக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.

மேலும்  கடந்த 21 ந் தேதி இரவு 11மணி அளவில் பைனான்சியர் சுப்ரமணி  அடியாட்களுடன் தன் வீட்டிற்கு வந்து  தன்னுடைய உதவியாளரையும் ,தன்னையும் தாக்கியதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு காவல்நிலையத்தில்  ஸ்ரீரெட்டி புகாரளித்துள்ளார். மேலும் ஸ்ரீரெட்டி தன்னிடம் பைனான்சியர் சுப்ரமணி தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் புகார் அளித்துள்ளார்.மேலும் தன்னுடைய ஆடி காரையும் அபகரிக்க திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார்.

 

Leave a Comment