அவதூறு கருத்து பரப்பியதாக கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி புகார்..!

அவதூறு கருத்து பரப்பியதாக கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி புகார்..!

கிஷோர் கே சுவாமி மீது நடிகை ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாகப் பதிவிட்ட கிஷோர் கே சாமி கடந்த ஜூன் 14 ஆம் தேதி சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து மேலும் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்து சமூக வலைதளத்தில் இழிபடுத்தி பேசிய வழக்கில் மீண்டும் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது, ரகுவரனின் மனைவி மற்றும் நடிகையான ரோகிணி தன்னைப் பற்றியும், மறைந்த தனது கணவர் ரகுவரன் குறித்தும் சமூக வலைத்தளத்தில் கிஷோர் கே சுவாமி அவதூறாக கருத்து பதிவு செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் ரோகிணி புகார் அளித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube