படப்பிடிப்புக்காக துபாய் நோக்கிப் பறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்!

மகேஷ் பாபுவுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் சர்காரு வாரிபாட்டா எனும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக துபாய் நோக்கி கீர்த்தி சுரேஷ் விமானத்தில் இன்று பறந்துள்ளார்.

தேசிய விருது பெற்ற நடிகையும் பிரபலமான தமிழ் திரையுலக நடிகையுமாகிய கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதனைத் தொடர்ந்து தமிழிலும் இவர் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்காரு வாரிப்பாட்டா எனும் படத்தில் நடித்து வருகிறார். கீதாகோவிந்தம் எனும் வெற்றி படத்தை இயக்கிய பரசுரம் பெல்லா எனும் இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்ததால் படப்பிடிப்புகள் தாமதப்படுத்தபட்டது. இந்நிலையில், படப்பிடிப்பு நடத்துவதுதற்காக தற்பொழுது துபாய் நோக்கி படக்குழுவினர் செல்கின்றனர் அமெரிக்காவில் நடந்த திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பு தளம் மாற்றப்பட்டுள்ள நிலையில், தான் துபாய்க்கு செல்லக்கூடிய புகைப்படம் ஒன்றை கீர்த்தி சுரேஷ் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விமானத்தில் இருக்கும் படி கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

author avatar
Rebekal