துவங்கியது தலைவி படபிடிப்பு… நடிகை கங்கணா ராவத்-பகிர்வு

தலைவி திரைப்படத்தின் மேலும் ஒரு பகுதியை நடித்து முடித்துவிட்டதாக நடிகை கங்கணா ரணாவத் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படை கொண்டு தலைவி படம் உருவாகிவருகிறது.ஜெயலலிதாவாக இந்தி நடிகை கங்கணா ரணாவத் நடித்து வருகிறார்.

Image

தமிழ் , தெலுங்கு, இந்தி 3 மொழிகளில் படம் தயாராகி ஒரேநேரத்தில் வெளியாகிறது.கொரோனாத்தொற்றால் படப்பிடிப்பு 7 மாதங்களாக நடக்கவில்லை.

இந்நிலையில் 7மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பு விறு விறுப்பாகியுள்ளது இந்நிலையில் நடிகை கங்கணா படபடிப்பு நடைபெறும் அரங்கம், அதில் தான் நடித்த தோற்றத்தின் புகைப்படங்களை எல்லாம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதில் படத்தின் மேலும் ஒரு பகுதியை நடித்துமுடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும் எம்ஜிஆராக நடிக்கும் நடிகர் அரவிந்த் சாமியும் தனது தோற்றத்தினை ட்விட்டரில் பக்கத்தில் வெளிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை கங்கணா வெளியிட்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வேகமாக பரவி வட்டமடித்து வருகின்றன.

author avatar
kavitha