நடிகை சித்ரா தற்கொலை விவகாரம்: கணவர் ஹேம்நாத் கைது

கடந்த 9 ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.இந்த தற்கொலையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ,அதன் பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில், சித்ரா தற்கொலை செய்துதான் இறந்தார் என முதற்கட்ட தகவல் வெளியானது.

கடந்த 6 நாட்களாக  சித்ராவின் கணவர் ஹேம்நாத் உட்பட பலரிடம் நசரத்பேட்டை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.சித்ராவின் தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் மற்றும் சித்ராவின்  தாயார் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மன அழுத்தத்தில் தான் தற்கொலை செய்திருக்கலாம்  என்று காவல்துறை தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

author avatar
Castro Murugan