முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் தர நடிகை சாந்தினி எதிர்ப்பு…!

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் தர நடிகை சாந்தினி எதிர்ப்பு…!

மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என உயர்நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்தார்.

மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் இதனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவே தன்னையும், தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என உயர்நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பணம் பறிப்பதற்காக பாலியல் புகார் தந்ததாக மணிகண்டன் கூறுவது பொய் என்றும், திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் தான் கணவன், மனைவியாக வாழ சம்மதித்தேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube