ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் போது செல்போன் திருட்டு.! – நடிகர் விமல் புகார்.!

தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விமல். தற்போது, சண்டைக்காரி, வெற்றிகொண்டான் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் நடிகர் விமல் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற திருமணவிழாவில் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது, திருமண விழாவில் தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார்.

தனது செல்போனை இருக்கையில் வைத்து விட்டு அங்கு வந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்துவிட்டு கீழே பார்க்கும் போது அந்த இடத்தில் செல்போன் காணாமல் போனதாக நடிகர் விமல் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.