நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது புகார்….!

  • நடிகர் விஷால், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி மீது புகார் அளித்துள்ளார்.
  • சக்ரா படத்திற்காக 3 கோடி கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தி விட்டதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஷால், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். கடன் வாங்கிய போது கையெழுத்திட்டு கொடுத்த உறுதிமொழி பாத்திரத்தை, ஆர்.பி.சவுத்ரி திருப்பி தரவில்லை என புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஷால், கடன் தொகையை திருப்பி கொடுத்த பின்னும் உறுதிமொழி பத்திரத்தை தரவில்லை என புகாரளித்துள்ள நிலையில், நடிகர் விஷால் தரப்பில், சக்ரா படத்திற்காக ரூ.3 கோடி கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.