நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் : தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் போது, வாக்களிக்க வந்த நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. அதன் பின் அவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி, சிவகார்த்திகேயனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத போது, அவர் வாக்களித்தது குறித்து பேசிய போது, ” விதிமீறி வாக்களித்திருந்தாலும், நடிகர் சிவகார்த்திக்கேயன் வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாத போது, ஒரு வாக்கை மட்டும் எண்ணாமல் விட முடியாது.” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment