நடிகர் சரத்பாபு உடலுக்கு பிரபலங்கள்,பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி.!!

மறைந்த நடிகர் சரத்பாபு பிரபலங்கள்எ, பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

பிரபல நடிகரான நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் தங்களுடைய இரங்கலை தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகர் சரத்பாபு உடல் ஹைதராபாத்தில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை, தி.நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 2 மணிக்கு சரத்பாபு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

சென்னை, தி.நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக சரத் பாபு உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடலுக்கு நடிகர், நடிகைகள், உறவினர்கள். ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.