நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மாயம்…!!! அவரது மனைவி போலீசில் புகார்….!!!!

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணாநகர் நகரில் வசித்து வருகிறார். இவர் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர், தனது நண்பரை பார்க்க செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லையாம். எங்கு தேடியும் இவர் கிடைக்கவில்லையாம்.இவர் மீது சில மோசடி குற்றசாட்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இவரது மனைவி ஜூலி அண்ணாநகர் போலீசில் புகார் அளித்துள்ளார். யாரேனும் கடத்தி விட்டார்களா, இல்லை தலைமறைவாக உள்ளாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
source : tamil.cinebar.in

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment