கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கார்த்தி..!!

  •  நடிகர் கார்த்தி தனது முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கோரோனோவிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நமக்கிருக்கும் ஒரே தீர்வாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. இதனால் பல அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் கார்த்தி தனது முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டதாக ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் மற்றும் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள சர்தார் படத்திலும் நடிக்கவுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.