இயக்குனர் சற்குணம்- நடிகர் அதர்வா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. இந்த படத்தை தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார். மேலும், நடிகர் அதர்வா நடிப்பில் தற்போது குருதி ஆட்டம் மற்றும் தள்ளி போகாதே ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படங்களுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் அதர்வா அடுத்ததாக தமிழ் சினிமாவில், களவாணி, நைய்யாண்டி, சண்டிவீரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவருடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
படத்திற்கான பூஜை கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது இயக்குனர் சற்குணம்- நடிகர் அதர்வா கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…
IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…