தமிழ்நாட்டில் 32 சுங்கச்சாவடிகளை நீக்க நடவடிக்கை- அமைச்சர் எ.வ.வேலு..!

32 சுங்கச்சாவடிகளை கண்டறிந்து மூடவேண்டும் என்று மத்திய அரசை வலிவுறுத்துவோம் என அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு , தமிழ்நாட்டில் 16 சுங்கச் சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், 48 சுங்கச் சாவடிகள் உள்ளன. கூடுதலாக உள்ள சுங்கச் சாவடிகள் கண்டறிந்து மூடவேண்டும் என்று மத்திய அரசை வலிவுறுத்துவோம் என அமைச்சர் எ.வ.வேலு  தெரிவித்துள்ளார்.

தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்து வரும் நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

author avatar
murugan