நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ..! நான்கு கொலை செய்தவருக்கு 4 ஆயுள் தண்டனை..!

சென்னையிலுள்ள ராயப்பேட்டை  முத்து தெருவை சார்ந்தவர் பாண்டியம்மாள் இவர் சில வருடங்களுக்கு முன் அவர் தனது  கணவரை பிரிந்து தனது 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

பாண்டியம்மாள் உடன்  தொடர்பில் இருந்த சின்னராஜ்  பாண்டியம்மாளின்  மூன்று பெண் குழந்தைகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததால் சின்னராஜ் உடனான தொடர்பை பாண்டியம்மாள் நிறுத்திக்கொண்டார்.

இதில் ஆத்திரமடைந்த சின்னராஜ் கடந்த 2016 ஆம் ஆண்டு பாண்டியம்மாள் மற்றும் அவருடைய  3 பெண் குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தலைமறைவானார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார் சின்னராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம்  நீதிபதி மஞ்சுளா குற்றம் சாட்டப்பட்ட சின்னராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு நான்கு கொலை வழக்குகளில் 4 ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பளித்தார்.

author avatar
murugan