பெரும் இழப்பால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு.!

பெரும் இழப்பால் பிரபல நடிகை அதிரடியாக முடிவு எடுத்துள்ளார். 

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சித்தாரா. தற்போது இவர் பல ஹீரோக் களுக்கு அம்மாவாக குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு 47வயது ஆகிவிட்ட நிலையிலும் இதுவரை திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் அதன் காரணத்தை கூறியுள்ளார். 

அதில் என் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்ததற்கு காரணம் என் வாழவில் எனக்கு ஏற்பட்ட பெரும் இழப்பால் தான். ஆம் எனது வாழ்வின் முக்கிய நபரான என் அப்பாவை இழந்தேன். அதனையடுத்து எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்று கூறியுள்ளார். மேலும் உங்களுக்கு ஏற்ற துணை இந்த வயதில் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக இல்லை என்று கூறியுள்ளார்.