விதிமீறும் திரையரங்குகள் மீது நடவடிக்கை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

விதிமீறும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வருவாய்த்துறை ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மருத்துவக்குழுவினரின் அறிவுரையின் பேரில்தான் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அலுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்காத திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், 50% சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து திரையரங்க உரிமையாளர்கள் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் 100% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்