சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக செயல்படும்-அதிமுக அறிக்கை

சிறுபான்மை மக்கள் விழிப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில்,  சிறுபான்மை சமூக மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக அதிமுக செயல்படும்.தேசிய குடிமக்கள் பதிவேடு சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்று மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.

விஷமப் பிரச்சாரங்களை செய்து சுயலாபம் அடைய சதி திட்டம் தீட்டுவோரிடம், சிறுபான்மை மக்கள் விழிப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும் விஷமப் பிரசாரங்களில் இருந்து அமைதி காத்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.