“41 பி.எட். கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?”- தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் நோட்டீஸ்!

தமிழகத்தில் 41 பி.எட் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேட்டு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 3 அரசு உட்பட 41 பி.எட் கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு வசதி குறைபாடு, ஆசிரியர் தட்டுப்பாடு, உட்பட பல புகார்கள் எழுந்துகொண்டே வந்தது. அந்தவகையில், சம்பந்தப்பட்ட அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேட்டு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அதற்க்கு 21 நாட்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.