#ElectionBreaking:”2 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல் -காலை 9 மணி வரை 9.72% வாக்குகள் பதிவு” – தேர்தல் ஆணையம்…!

#ElectionBreaking:”2 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல் -காலை 9 மணி வரை 9.72% வாக்குகள் பதிவு” – தேர்தல் ஆணையம்…!

2 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி வரை 9.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட தேர்தலானது கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவானது.

இதனையடுத்து,9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,2 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் இன்று காலை 9 மணி வரை உள்ள நிலவரப்படி மொத்தம் 9.72% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும்,9 மணி வரையிலான நிலவரப்படி,அதிகபட்சமாக விழுப்புரம் – 13.88%,காஞ்சிபுரம்- 10.51%, நெல்லை-6.59%,ராணிப்பேட்டை – 7.4% வாக்குப்பதிவும்,குறைந்த பட்சமாக ,திருப்பத்தூரில் – 5.22% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube