சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சேர்ந்தவர் சரஸ்வதி இவரது கணவர் பாலகிருஷ்ணன். இரண்டு வாரங்களுக்கு பாலகிருஷ்ணன் முன் இறந்துள்ளார். இதனால் சரஸ்வதி தன்னுடைய மகனான எத்திராஜ் உடன் வசித்து வந்தார்.
எத்திராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதனால் அவருடைய மனைவி எத்திராஜை விட்டு பிரிந்து சென்று விட்டார். கணவர் இறந்த நிலையில் சரஸ்வதிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த எத்திராஜ் நாம் இருவரும் வாழ வேண்டாம் என தற்கொலை செய்து கொள்ளலாம் என தாயிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை எத்திராஜ் தாய் சரஸ்வதியின் கழுத்தை அறுத்து கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொள்ள கத்தியால் வயிற்றில் குத்திக் கொண்டார் எத்திராஜ்.
ஆனால் கத்தி வயிற்றில் சிக்கிக்கொண்டதால் எத்திராஜ் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சரஸ்வதி இறந்து கிடந்தார். எத்திராஜ் வயிற்றில் கத்தி சொருகி துடிதுடித்து கத்தியுள்ளார்.
இதை பார்த்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எத்திராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…