ஆதார் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி!மக்களே உஷார் …..

ஆதார் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி!மக்களே உஷார் …..

அரசுத்துறைகளிடம் ஆதார் எண்களை பகிர அவசியம் இல்லை என  ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆதார் தகவல் திருட்டைத் தடுக்க விர்ச்சுவல் ஐ.டி. என்ற மெய்நிகர் அடையாள எண்ணைப் பயன்படுத்தும்  புதிய முறையை அறிமுகப்படுத்த ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் வருமான வரித்துறை உள்ளிட்ட எந்த அரசுத் துறையினர் கேட்டாலும் பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அத்தகைய சூழ்நிலைகளில் அதார் தொடர்பான தங்களின் மெய்நிகர் எண்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் ஆதார் ஆணைய தலைமைச் செயலதிகாரி அஜய் பூஷன் பாண்டே  தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை வரும் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
source: dinasuvadu.com

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *