அரசியல்வாதிக்கு பூங்கொத்து கொடுப்பது போல கத்தியால் நெஞ்சில் குத்திய இளைஞர்..!

ஹாங்காங்கில் கடந்த ஐந்து மாதத்திற்கு மேலாக மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.அரசுக்கு எதிராக போராடி வரும் மக்களை ஜீனியஸ் என்பவர் இகழ்ந்து பேசி வருகிறார்.
இந்நிலையில் ஜீனியஸ் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்.அதனால் மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது ஜீனியஸ் ரசிகர் போல ஒருவர் அங்கு வந்தார்.அவர் கையில் பூங்கொத்து வைத்து இருந்தார்.
கையில் வைத்து இருந்த பூங்கொத்தை ஜீனியஸ்க்கு கொடுத்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தார்.அப்போது திடீரென அந்த நபர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஜீனியஸ் நெஞ்சில் குத்தினார்.
இதை பார்த்த தொண்டர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.சிகிசைக்கு பின் பேசிய ஜீனியஸ் தனது விலா எலும்பால் கத்தி தடுக்கப்பட்டதாகவும் ,கத்தி இரண்டு சென்டிமீட்டர் ஆழத்தில் காயம் ஏற்பட்டதாக கூறினார்.
மேலும் கத்தியால் குத்திய அந்த இளைஞரை போலீசார் கைது செய்து உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

author avatar
murugan