பெரம்பலுார் : பெரம்பலுாரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலர் ராஜா அக்கட்சியின் தொண்டரை நாய் என்று திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து பெரம்பலுார் மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலர் ராஜா பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு என்று பெரம்பலுார் காந்தி சிலை முன்பாக மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் ராஜா ஏறியதும் கீழே மது போதையில் கட்சி கொடி மற்றும் பதாகைகளுடன் நின்றிருந்த ஒரு தொண்டர் ‘ராஜா வாழ்க வாழ்க’ என்று கோஷமிட்டு கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற ஆரம்பமானது. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பேசினர். இதன் பின்னர் ராஜா பேசினார். அப்போது அதே தொண்டர் தொடர்ந்து ‘ராஜா வாழ்க’ என்று கோஷமிட்டார். இதனால் கோபமடைந்த ராஜா, ‘ஏய் அந்த நாயை வெளிய துாக்கிட்டு போங்கப்பா’ என கூறினார். பொது மேடையில் தொண்டரை நாயே என திட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Election2024 : சிறைவாசிகள் இந்திய தேர்தல் சட்டத்தின் படி வாக்களிக்க தகுதி இல்லாதவர்கள் ஆவார். இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை (ஏப்ரல் 19) முதல்…
Uttama Villain : உத்தம வில்லன் படம் தோல்வி படம் தான் என லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் விளக்கம் கொடுத்துள்ளது. இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு…
Election2024: வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் தேவையா என்பது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம். நாட்டின் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகிறது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப்…
ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30…