ஆட்டு பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய்…! பரிதாபமாக உயிரிழந்த 33 ஆடுகள்…!

திருப்பூர்  மாவட்டம், வெள்ளகோவில் அருகே, சக்தி பாளையத்தில் தங்கவேலு என்பவரின் ஆட்டு பட்டியில் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில் 33 ஆடுகள் உயிரிழந்துள்ளன. 

திருப்பூர்  மாவட்டம், வெள்ளகோவில் பகுதியை தங்கவேலு என்பவர் தனது ஆட்டு பட்டியில் நேற்று ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு  சென்றுள்ளார். அதிகாலையில் பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில், 18 ஆடுகள் மற்றும் 15 குட்டிகள் உயிரிழந்துள்ளது. இவற்றின் மதிப்பு 4 லட்சம் ஆகும்.

இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர் கூறுகையில்,  ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு வெறிநாய்களை வளர்க்கின்றனர். இது தொடர்பாக நகராட்சியில் புகைரளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தனக்கு அரசாங்கம் உரிய இழப்பீடு வழங்குமாறும் தங்கவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.