சந்திராயன் 1 மற்றும் சந்திராயன் 2 திட்டங்கள் இடையே உள்ள வித்தியாசங்கள் ஒரு பார்வை!

நிலவின் தரைப்பகுதியில் இறங்கி  ஆய்வினை மேற்கொள்ள நாளை அதிகாலை ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது. உலகில் எந்த நாடுகளும் செய்யாத ஒரு புதிய சாதனையை இஸ்ரோ செய்கிறது. இந்த திட்டத்தின் மைய இருப்பவர் இஸ்ரோ தலைவர் சிவன் ஆவர்.

இந்தியா சார்பில் நிலவை ஆராய முதல் முதலாக அனுப்பப்பட்ட விண்கலம் சந்திராயன் 1 . கடந்த 2008  ம்மா ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அனுப்பப்பட்டது. இந்த திட்டதை சிறப்பாக செய்து முடித்தவர் அப்போதைய இஸ்ரோ இயக்குனராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை ஆவர்.

 

திட்ட மதிப்பு:

சந்திராயன் 1 திட்டத்தின் மொத்த மதிப்பு 540 கோடி ஆகும். சந்திராயன் 2 திட்டத்தின் மொத்த மதிப்பு 978 கோடி ஆகும்.

சுமந்து செல்லும் செயற்கைகோள் :

சந்திராயன் 1 விண்கலமானது PSLV (C11) செயற்கை கோள்களிலும் , சந்திராயன் 2 விண்கலமானது GSLV (MK III) செயற்கைக் கோள்களையும் சுமந்து செல்கிறது.

விண்கலங்கள் எடை :

சந்திராயன் 1 விண்கலம் 1,380 கிலோ கிராம்  சந்திராயன் 2 விண்கலம் 3,850 கிலோ கிராம் எடை அளவையும் சுமந்து செல்கிறது.

சந்திராயன் 1 – 11 இந்திய விண்கலம் மற்றும் உலக நாடுகளின் விண்கலங்களை சுமந்து சென்றன . தற்போது , சந்திராயன் 2 – 14 இந்திய விண்கலன்களையும் நாசா மையத்தின் 1 விண்கலமும் , 8 ஆர்பிட்டர் களமும் , 4 லேண்டார், 1 ரோவர் விண்கலன்களையும் சுமந்து செல்ல இருக்கிறது.