குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம்…, தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா …? மதுரை எம்.பி சு.வெங்கடேசன்!

குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம்…, தமிழக மீனவர்களுக்கு ஒரு நியாயமா என எம்.பி சு.வெங்கடேசன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து மக்களவையில் மதுரை எம்பி சு வெங்கடேசன் அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குஜராத் மாநிலத்தின் துவாரகா மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்டதற்கு மத்திய அரசு உடனடியாக தனது கண்டனத்தை பதிவு செய்தது.

அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரிகளை அழைத்து நேரடியாகவும் தனது கண்டனத்தை மத்திய அரசு பதிவு செய்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பலர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். இது சம்பந்தமாக தமிழக முதல்வர் மத்திய அரசின் தலையீட்டை கோரி கடிதம் எழுதி இருக்கிறார்.

ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த தலையீடும் செய்யவில்லை. மேலும் இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. குஜராத் மீனவர்களுக்கு ஒரு நியாயம் தமிழக மீனவர்களுக்கு வேறு ஒரு நியாயமா? தமிழக மீனவர்கள் மீன்பிடி உரிமையை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டுமெனவும், இலங்கை கடற்படையினருடைய தாக்குதலுக்கு மத்திய அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Rebekal

Recent Posts

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

5 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

6 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

7 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

8 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

8 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

9 hours ago