பெங்களூர் அணிக்கு புதிதாகக் கிடைத்திருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்… படிக்கல்..!

ஐபிஎல் டி20 தொடரின் 3-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேற்று மோதியது.

இந்த போட்டியில் முதலில் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது அணியில் தொடக்க வீரர்களாக படிக்கல் மற்றும் ஃபின்ச் இருவரும் களமிறங்கினர். இவர்கள் ஆட்டம் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி வந்தனர். சிறப்பாக விளையாடி வந்த படிக்கல் அரைசதம் அடித்து 56 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த சில நிமிடங்களில் ஃபின்ச் 29 ரன்னுடன் வெளியேறினார்.

இதைதொடர்ந்து, இறங்கிய விராட் கோலி சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர், களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து 51 ரன்கள் குவித்தார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர்.

மேலும் அதற்கு பிறகு பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 19.4 ஓவர் முடிவில் தனது அனைத்து விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்து, 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மேலும் இதன் மூலமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் போட்டியிலே வெற்றியை சந்தித்தது.

இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் பேசிய ஏபி டிவில்லியர்ஸ், கடினமாக பயிற்சி பெற்று கடின உழைப்பிற்கு கிடைத்த இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி தருகிறது. மேலும் நாங்கள் இந்த போட்டியில் சரியான மாற்றங்களை கொண்டு வந்தோம் மேலும் எனக்கு வயது 36 நான் இந்த வயதில் விளையாடுகிறேன் என்று எனக்கே சந்தேகம் ஏற்படுத்தும் ஆனால் சரியான பயிற்சியும் முறைப்படியான கடின உழைப்பு இருந்தால் கண்டிப்பாக நிச்சயமாக விளையாடலாம் .

நான் இந்த போட்டியில் சிறப்பாக விளையாட நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய படிக்கல் மிகவும் அருமையாக விளையாடினார். மிகவும் திறமைசாலி என்று நிரூபித்துவிட்டார்.

மேலும் பெங்களூர் அணிக்கு புதிதாகக் கிடைத்திருக்கும் ஒரு நல்ல இளம் கிரிக்கெட் வீரர் ஆவார். மேலும் பார்த்தவுடன் பேசவும் கொஞ்சம் வெட்கப்படுகிறார், ஆனால் சிறிது காலம் மட்டுமே அந்த மாதிரி இருக்கும் என்று சிரித்துக்கொண்டே ஏபி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி !! டெல்லி- ஹைதராபாத் இன்று பலப்பரீட்சை!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…

17 mins ago

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

8 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

10 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

12 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

13 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

13 hours ago