நண்பனின் மனைவி காப்பாற்றுங்கள் என அலறியதால் காப்பாற்ற சென்ற நண்பன்!பின்னர் நடந்த நிகழ்வு!

  • நண்பனின் மனைவி காப்பாற்றுங்கள் என அலறிய சத்தம் கேட்டு உள்ளே சென்ற நண்பன்.
  • காவல்துறையினர் பெண் இவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தை சேந்தவர் ராஜ்கண்ணு ஆவார்.இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன.இந்நிலையில் கார்த்திகா ஏதோ மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால் நேற்று தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார்.பின்னர் எரிச்சல் தாங்க முடியாமல் என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அலறியுள்ளார்.அப்போது அந்த வழியாக ராஜ்கண்ணுவின் நண்பன் கலியமூர்த்தி வந்துள்ளார்.

அப்போது கார்த்திகாவின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்று அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.இதனால் கலியமூர்த்திக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதில் கார்த்திகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.கலியமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிய நிலையில் கார்த்திகா தீக்குளிக்க என்ன காரணம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.