LIVE

LIVE: ஒடிசா விபத்து…தமிழர்களில் 3 பேர் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல்!!

LIVE: ஒடிசா விபத்து…தமிழர்களில் 3 பேர் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல்!!

today live

தமிழர்களின் நிலை 

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழர்களில், 8 பேரின் நிலை இதுவரை தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அதில் 3 பேர் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,சென்னையை சேர்ந்த ஜெகதீசன் கோவையை சேர்ந்த நாரகணி கோபி ஆகிய இருவரும் வீடு திரும்பினர் என்றும், கமல் என்பவர் ரயிலில் பயணிக்கவில்லை எனவும் மீதமுள்ள 5 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.6.2023 – 5.00PM

நிவாரண தொகை அறிவித்த ஆந்திர முதலமைச்சர்

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கப்படும் எனவும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 5 லட்சம் மற்றும் சிறு காயங்கள் அடைந்தவர்களுக்கு 71 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும்  ஆந்திர  முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.

4.6.2023 – 4.00PM

இலவச பேருந்து சேவை

ஒடிசா ரயில் விபத்து காரணமாக கட்டாக், பூரி, புவனேஸ்வரில் இருந்து கொல்கத்தாவுக்கு இலவச பேருந்து சேவையை என முதலமைச்சர் நவீன் பட்நாயக் தற்போது அறிவித்துள்ளார். 

4.6.2023 – 3.45PM

ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்

ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

4.6.2023 – 3.15PM

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு 

வெப்ப சலனம் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கலாம்; ஓரிரு இடங்களில் இயல்பில் 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம்.

4.6.2023 – 2.29 PM

5 லட்சம் நிவாரணம்

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சமும்,  காயமடைந்தவர்களுக்கு 1 லட்சமும் வழங்கப்படும் என்றும்,உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தீ விபத்து 

டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் உள்ள குடிசைப் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 11-12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக டெல்லி தீயணைப்பு சேவைகள் உதவி பிரிவு அதிகாரி ஆர்.கே.சின்ஹா தெரிவித்தார். அப்பகுதியில் குப்பைகள் கிடக்கும் திறந்தவெளிப் பகுதியில் தீ பரவத் தொடங்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

4.6.2023

 

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube