திருச்சியில் ஜவுளி கடையில் ஜஃபிரா எனும் பெண் ரோபோ! இது என்ன செய்கிறது தெரியுமா?

திருச்சியில் ஜவுளி கடையில் ஜஃபிரா எனும் பெண் ரோபோ.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி  ,இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், திருச்சியில் செயல்படும் ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்களின் உடல்வெப்பநிலையை அறியவும், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்யவும், கடைக்கு எத்தனை பேர் வந்துள்ளனர் என்பதை அறியவும் ஜஃபிரா எனும் பெண் ரோபோவை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.