வீட்டிற்குள் மகளை அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வந்த தந்தை!கைது செய்ய சென்ற காவல்துறையினர்!காத்திருந்த அதிர்ச்சி!

  • தனது சொந்த மகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை.
  • கைது செய்ய சென்ற காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சியான நிகழ்வு.

சென்னையின் புறநகர் பகுதியான வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ் ஆவார்.இவர் இவரது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தனது மகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்நிலையில் அனைத்து மகளீர் காவல்துறையினர் பிரகாஷை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளன.இதன் காரணமாக காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்த பிரகாஷ் தலைமறைவாகி இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 25-ம் தேதி அதிகாலையில் கார் நின்று கொண்டிருப்பதை கண்டறிந்த காவல்துறையினர் பிரகாஷை கையும் களவுமாக பிடிப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது வீட்டின் பின் வழியாக சென்று பிரகாஷை கைது செய்ய முயற்சி செய்யும் போது பிரகாஷ் தனது வளர்ப்பு நாயை ஏவி விட்டு காவல்துறையினரை கட்டுப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக  காவல்துறையினரால் பிரகாஷை கைது செய்ய முடியவில்லை.

பின்னர் தீயணைப்பு துறையினருக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர்.இதன் காரணமாக தீயணைப்பு துறையினர் பிரகாஷ் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளன.பின்னர் அவர்கள் நாயின் கழுத்தில் சுருக்கு கன்னியை மாட்டி கட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.

பின்னர் காவல்துறையினர் பிரகாஷை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.