இளம் பெண்ணிற்கு நிர்வாண பூஜை.! 20 ஆயிரம் பேரம் பேசிய போலி சாமியார் அதிரடி கைது.!

ஆந்திராவில் இளம் பெண்ணிற்கு நிர்வாண பூஜை செய்ய பெற்றோரிடம் 20 ஆயிரம் பேரம் பேசிய போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். 

சில நாட்கள் முன்னர்தான் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் சிறுமிகளை அழைத்து வந்து நிர்வாண பூஜை செய்வதாக கூறி 1 லட்சம் தருகிறோம் என கூறிய 11 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். தற்போது அதே போல ரேணிகுண்டா பகுதியிலும் நடந்துள்ளது.

ரேணிகுண்டா பகுதியில் உடல் ஆரோக்கியம் கிடைக்கும் என கூறி இளம்பெண்ணிற்கு பூஜை செய்வதாக கூறி போலி சாமியார் அந்த பெண்ணின் பெற்றோரிடம் 20 ஆயிரம் பேரம் பேசியுள்ளார். பூஜையின் போது அந்த பெண்ணின் ஆடைகளை கழட்ட முற்படுகையில் அந்த பெண் அந்த இடத்தில் இருந்து தப்பித்து காவல்துறைக்கு போன் செய்து விட்டது. உடனடியாக வந்த போலீசார் போலி சாமியாரை கைது செய்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.