பத்ம சேஷாத்ரி பள்ளியைத் தொடர்ந்து,சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் பாட ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன்.இவர் அங்கு பயின்ற பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும்,ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் எழுந்த புகாரை அடுத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து, ராஜகோபாலனை ஜூன் 8 ஆம் தேதி வரை,14 நாட்கள் புழல் சிறையில் அடைக்குமாறு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து,சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகிரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல் துறை ஆசிரியர் ஆனந்த் மீது எழுந்துள்ள பாலியல் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகிரிஷி வித்யா மந்திரின்,சிபிஎஸ்இ பள்ளியில் பணியாற்றிய ஆனந்த் தற்போது அதே பள்ளியின் மெட்ரிக் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.இவர் மீது முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரைப் பற்றிய தகவலை மற்றொரு மாணவி,ஆனந்துக்கு அனுப்பி இது நீங்கள் தானா? என்று வாட்ஸ்-அப்பில் கேட்டுள்ளார்.ஆனால்,இதற்கு மறுப்பு தெரிவித்த அவர்,”இந்த செய்தியை நீங்கள் நம்புகிறீர்களா?,உங்கள் அனைவருக்கும் என்னைப் பற்றி தெரியும்,அதிலும் குறிப்பாக என்னிடம் வணிகவியல் பாடம் படிக்கும் மாணவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
மேலும்,என் அன்பான மகளே,எனது பணியில் நான் எவ்வளவு அர்பணிப்புடன் இருக்கிறேன் என்று கடவுளுக்கும் தெரியும்.நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை,நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆக இருப்பேன்.என் மாணவர்களை நான் எப்போதும் பாதுகாப்பேன்.
இந்த காரியத்தை யார் செய்தார்கள் என்று எனக்கு தெரியாது.ஆனால்,கண்டிப்பாக என்னிடம் படித்த மாணவர்களாக இருக்க மாட்டார்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த மாணவி,”மாணவர்கள் மீது அக்கறை என்ற பெயரில் நீங்கள் தவறு செய்துள்ளீர்கள்.அதை உங்கள் மாணவர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?,இந்த வெட்கக்கேடான செயலை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?”,என்று கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,இந்த இருவரின் வாட்ஸ்-அப் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Congress Protest : பிரதமர் மோடி பெங்களூரு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸார் சொம்பு வைத்து போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 2019 தேர்தலிலும், 2024…
TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)…
கம்மங்கூழ் -கம்மங்கூழை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் கம்மங்கூழும் ஒன்று. 15 வருடங்களுக்கு முன்பு அனைவரது வீடுகளிலுமே…
Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ்…
BJP : கடந்த 10 ஆண்டுகளில் பாஜக கட்சியானது தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதள விளம்பரங்களுக்கு 3,641 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆளும் பாஜக அரசு…
Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ் மாஸ்டர் தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல…