ஹிஜாப் அணிந்திருந்த பெண் மருத்துவருக்கு மிரட்டல்.? பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு.!

ஹிஜாப் அணிந்திருந்த அரசு பெண் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் பணியில் இருந்த இஸ்லாமிய பெண் மருத்துவர் ஒருவர் ஹிஜாப் அணிந்து இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் என்பவர் , அந்த பெண் மருத்துவரிடம் ஏன் மருத்துவர் உடை அணியாமல் , ஹிஜாப் அணிந்து இருக்குறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

மேலும், மருத்துவரின் அனுமதியின்றி வீடியோ எடுத்துள்ளார். அதனை கண்ட அந்த பெண் மருத்துவரும் வீடியோ எடுத்துள்ளார். இந்த இரு விடீயோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதை அடுத்து, காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக நிர்வாகி புவனேஷ் ராம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து புவனேஷ் ராமை தேடி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.