கார், டிரக் நேருக்கு நேர் மோதி விபத்து..! 4 பேர் பலி..!

மத்திய பிரதேசத்தில் கார் மீது டிரக் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1 சிறுமி காயமடைந்தார்.

மத்திய பிரதேசத்தின் லக்னான் பகுதியில் வேகமாக வந்த டிரக், கார் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். லக்னடான் தேசிய நெடுஞ்சாலையில் டிரக் ஒன்று வேகமாக வந்துள்ளது. இந்த டிரக் தனக்கு எதிரே வந்த கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த பயங்கர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தாகவும் மற்றும் 17 வயது சிறுமி காயம் அடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான காரில் இருந்து பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரும் சியோனி மாவட்டத்தின் நாகண்டேவ்ரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். டிரக் மோதியதில் காரின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. இந்த விபத்தினால் தடைபட்ட போக்குவரத்தை சீர் செய்ய கிரேன் வரவழைக்கப்பட்டு சேதமடைந்த கார் சாலையில் இருந்து அகற்றப்பட்டது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment