தனியாக வீட்டிலிருந்த 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 62 வயது முதியவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வயதானவர்கள் என்றாலே பாவம் போல பார்க்கக்கூடிய காலம் போய், தற்பொழுது அவர்களையும் இரக்கமின்றி பலாத்காரம் செய்ய கூடிய கொடூரர்கள் இந்த உலகத்தில் நிறைந்துவிட்டார்கள்.
80 வயதுடைய நாகம்மாள் எனும் மூதாட்டி கணவனை இழந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது அண்டை வீட்டில் 62 வயதான பார்த்திபன் எனும் முதியவரும் வசித்து வருகிறார். இந்நிலையில், குடிபோதையில் இருந்த பார்த்திபன், நாகம்மாள் வீட்டில் தனியாக இருக்க கூடிய நேரம் பார்த்து, அவரது வீட்டுக்குள் புகுந்து நாகம்மாளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
பயந்து போய் அலறிய நாகம்மாள் சத்தம் வெளியில் கேட்டதால், அவரது பேரன் அங்கு வந்து பார்த்திபனை தள்ளிவிட்டு நாகம்மாளை காப்பாற்றியுள்ளார். போதையில் இருந்த பார்த்திபனை பேரன் எச்சரித்தும், உங்கள் வீட்டிலுள்ள அனைவரையும் கொன்று விடுவேன் என பார்த்திபன் மிரட்டியதால் நாகம்மாள் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனால் பார்த்திபனை போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…
Sachin Tendulkar : இன்று சச்சின் டெண்டுல்கர் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய…
Memory power-ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம். வால் நட்ஸ்; இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது…
Rahul Gandhi : மோடிக்கு நெருக்கமான 22 பேரிடம் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வசூல் செய்யப்படும் என ராகுல் காந்தி…
Love Brain Disorder : சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு 'லவ் ப்ரைன்' எனும் வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சீன பத்திரிகையின் அறிக்கை சீனாவில்…