பிறந்தநாள் கொண்டாட சென்ற 19 வயது இளம் பெண்ணிற்கு நண்பர்களால் அரங்கேறிய கொடூரம்!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது 19 ஆவது பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் செல்கையில், அந்தப் பெண்ணின் நண்பர்களாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த அந்த பெண் தனது 19 வது பிறந்தநாளை ஜூலை 7ஆம் தேதி கொண்டாடியுள்ளார்.

அப்போது சம்பூரில் உள்ள அந்தப் பெண்ணின் நண்பர்கள் அந்தப் பெண்ணை பிறந்தநாள் கொண்டாட அழைத்துள்ளனர். இதனால் அந்த இளம் பெண்ணும் சாம்பூருக்கு சென்றுள்ளார். அங்கு பிறந்தநாள் கொண்டாடிய அந்த நான்கு நண்பர்கள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனை அந்த பெண் வீட்டிற்கு தெரிவிக்காமல் இருந்துள்ளார். பிறகு அந்தப் பெண்ணுக்கு வயிற்று வலி அதிகமாக உள்ளது. உடனே அப்பெண்ணின் பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.  பிறகு, மருத்துவர்கள் இந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதா  பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். உடனே, அந்தப் பெண்ணிடம் பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். அந்தப் பெண் பின்னர் நடந்ததை கூறியுள்ளார்.

உடனே பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறபடுகிறது. அதே வேளையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் உடல்நலக்குறைவு அதிகமானதால் இறந்துவிட்டார். ஆனால் இன்னும் அந்த பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர்களை போலீசார் பிடிக்க வில்லை. இதனை கண்டித்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டு அந்தப் பெண்ணின் உறவினர்கள் போராட்டம் செய்து உள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.