உ.பி.யில் 17 வயது சிறுமி ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் வன்கொடுமை.!

17 வயது சிறுமியை ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் பல்லியா கிராமத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக 17 வயது சிறுமி தனது பக்கத்து விட்டாரால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் 20 வயது இளைஞன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவலர் ஒருவர் தெரிவித்தார்.  புகாரின் அடிப்படையில் அந்த நபரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும்  கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.