கடைக்கு முட்டை வாங்க சென்ற 13 வயது சிறுமியை கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்த 17 வயது சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!

கடைக்கு முட்டை வாங்க சென்ற 13 வயது சிறுமியை கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்த 17 வயது சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிம்டேகா பகுதியை சேர்ந்த 13 வயசு சிறுமி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி கடைக்கு முட்டை வாங்க சென்றுள்ளார்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 17 வயது சிறுவன் சிறுமியை பக்கத்தில் இருந்த அணைப்பகுதிக்கு கடத்தி சென்றுள்ளார்.

பின்னர் அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இந்த சம்பவம் அந்த மாநிலம் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் காரணமான வழக்கு சிம்தேகாவில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இந்நாள் வரை நடந்து வந்தது.அதில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5000 பணம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் 17 வயது சிறுவன் என்பதால் அவருக்கு 21 வயது ஆகும் வரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் காவலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Join our channel google news Youtube