கோவையில் 13 வயது சிறுமி மாயம்.! 6 தனிப்படைகள் மூலம் உடனடியாக மீட்ட போலீசார்.!

கோவையில் 13 வயது சிறுமி மாயம்.! 6 தனிப்படைகள் மூலம் உடனடியாக மீட்ட போலீசார்.!

Kovai Teen Girl Rescued

கோவையில் 13 வயது சிறுமி நேற்று முன் தினம் மாயமானதை தொடர்ந்து, காவல் துறையினர் 6 தனிப்படைகள் மூலம் நேற்று மீட்டனர். 

கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிப்புதூர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் , நேற்று முன் தினம் பகல் 12 மணி அளவில் காணாமல் போயுள்ளார். இதனை அடுத்து பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

சிறுமி காணாமல் போன புகாரின் பெயரின் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் 6 தனிப்படைகள் அமைத்து தேடினர். இதனை தொடர்ந்து, நேற்று பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் காணாமல் போன 13 வயது சிறுமி மீட்கப்பட்டார்.

வீட்டில் பெற்றோர்கள் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube