அண்ணா நகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ மோகனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ மோகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து மக்கள் நலப் பணியில் ஈடுபட்டு வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் ஒரு திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ மோகனுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்