தென்மேற்கு பருவமழை:தீவிரம் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சிலை இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் மற்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மேலும் மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.