டிஜிட்டல் இந்தியா கிராமப்புற மக்களுக்காகவே!பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி,ஏழை, எளிய கிராமப்புற மக்களும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனை எளிதில் பெறுவதற்காகவே டிஜிட்டல் இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாடல் நடத்தினார். அப்போது, கிராமப்புற மக்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனை எளிதில் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே டிஜிட்டல் இந்தியா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக கூறினார்.
ரயில்வே பயணச்சீட்டுக்கான முன்பதிவு, கட்டணத்தைத் திரும்பப் பெறுதல் போன்ற சேவைகள், அனைத்துத் தரப்பினரும் ஆன்லைன் மூலம் பயனடையும் வகையில் எளிதாக்கப்பட்டிருப்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பொதுமக்கள் அனைவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில், மத்திய அரசின் பொதுச் சேவை மையத்திற்கான வலைத்தளக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் பலனடையும் பயனாளிகளுடன் பிரதமர் மோடி அவ்வப்போது காணொலி மூலம் உரையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.