புதுச்சேரியில் தமிழக அரசு பேருந்து தீ வைத்து எரிப்பு..!

Default Image

புதுச்சேரி காலாப்பட்டு அருகே தமிழக அரசுப்பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது.

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட விழுப்புரம் போக்குவரத்துக்கழக அரசுப்பேருந்து, காலாப்பட்டு அருகே வந்த போது மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். இதனைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசியதில் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்த சேதமடைந்தது. காலாப்பட்டு தீயணைப்புத்துறையினர் பேருந்தில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. தமிழக பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தில் வந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்