#BREAKING: சென்னை உட்பட 21 மாவட்டங்களில் இடியுடன் மழை தொடரும்..!

Default Image

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை தொடரும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 10 மணி வரை அதாவது 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்