பாகிஸ்தான் வெல்க என்று முழக்கமிட்ட பெண் ! தேசத்துரோக வழக்கில் கைது,14 நாட்கள் நீதிமன்றக் காவல்

Default Image

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று  முழக்கமிட்ட பெண் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில்,அகில இந்திய மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி பங்கேற்றார்.இந்த பேரணியில் திடீரென பெண் ஒருவர் ஏறி மைக்கில் ,” பாகிஸ்தான் ஜிந்தாபாத்”(பாகிஸ்தான் வெல்க ) என்று முழக்கமிட்டார்.அந்த சமயத்தில் மேடையில் இருந்த ஓவைசி மேடையில் இருந்த அந்த பெண்ணிடம் இருந்து மைக்கை வாங்க முயற்சி செய்தார்.இதன் பின்னர் காவல்த்துறையினர் மேடையேறி அந்த பெண்ணை மேடையிலிருந்து கீழே இறக்கினார்கள். இதன் பின் இது குறித்து ஒவைசி கூறுகையில்,பெண்ணுக்கும்  கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் இந்தியாவுக்காக இருக்கிறோம். எதிரி நாடான பாகிஸ்தானை எந்தவிதத்திலும் ஆதரிக்க மாட்டோம். எங்களுடைய ஒட்டுமொத்த பயணமே இந்தியாவைப் பாதுகாப்பதுதான் என்று கூறினார்.

இதன் பின்னர் அந்த பெண்ணை காவல்த்துறையினர் தேசத்துரோக வழக்கில் கைது செய்தனர்.அந்த பெண் மீது 124A, 153A  மற்றும் 153B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுது அந்த பெண்ணுக்கு  14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்