மருத்துவர்கள் அலட்சியம் தாய் – பிறந்த குழந்தை மரணம்.!

Default Image
  • நாமநாதபுரத்தில் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாயும்  ,அவரது குழந்தையும் உயிரிழந்தனர்.
  • பிரசவத்தில் மருத்துவர்கள் அலட்சியத்தால் தான் தாய் -குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றசாட்டு .

நாமநாதபுரத்தில் உள்ள ராஜசூரியமடை சேர்ந்தவர் முருகேசன்.இவருக்கும் அரியக்குடியை சார்ந்த ராமசந்திரன் மகள் கீர்த்திகாகவும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.முருகேசன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கர்ப்பிணியான கீர்த்திகாவுக்கு நேற்று திடீர்ரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.

இதனால் கீர்த்திகா உறவினர்கள் அவரை நாமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கீர்த்திகாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே கீர்த்திகாவும் ,அவரது குழந்தையும் உயிரிழந்தனர். பின்னர் கீர்த்திகா மற்றும் அவரது குழந்தையின் உடல்கள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று காலை கீர்த்திகாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரசவத்தில் கவனக்குறைவு காரணமாகவே தாய் மற்றும் குழந்தை உயிரிழந்து உள்ளனர். இதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament