காஷ்மீரில் 37 மணி நேரமாக நடந்த என்கவுன்டர்! 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் …..

Default Image

 
காஷ்மீரின் தெற்கு பகுதியான புல்வாமா மாவட்டம் லித்தாபோரா என்ற பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ்படை முகாம் மீது கடந்த ஞாயிறன்று இரவு பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.உடனே  சுதாரித்துக்கொண்ட சி.ஆர்.பி.எப்.படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் கடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இவர்கள் இடையே நடந்த 37 மணி நேர துப்பாக்கிச் சண்டை நேற்று முடிவுக்கு வந்தது. இதில் 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இது குறித்து சி.ஆர்.பி.எப். .ஐ.ஜி. ரவிதீப் ஷகாய் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் லஷ்கரே தொய்பா பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் ஏ.கே. 47 உள்ளிட்ட நவீன துப்பாக்கிகள் வைத்திருந்தனர் என்றும் கூறினார் . அவர்களிடம் கைப்பற்றிய டைரியில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்குவோம் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. மேலும் அங்கு தேடுதல் வேட்டை நடக்கிறது என்று தெரிவித்தார்….
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament