காஷ்மீரில் 37 மணி நேரமாக நடந்த என்கவுன்டர்! 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் …..

காஷ்மீரின் தெற்கு பகுதியான புல்வாமா மாவட்டம் லித்தாபோரா என்ற பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ்படை முகாம் மீது கடந்த ஞாயிறன்று இரவு பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.உடனே சுதாரித்துக்கொண்ட சி.ஆர்.பி.எப்.படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிலும் கடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இவர்கள் இடையே நடந்த 37 மணி நேர துப்பாக்கிச் சண்டை நேற்று முடிவுக்கு வந்தது. இதில் 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இது குறித்து சி.ஆர்.பி.எப். .ஐ.ஜி. ரவிதீப் ஷகாய் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் லஷ்கரே தொய்பா பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் ஏ.கே. 47 உள்ளிட்ட நவீன துப்பாக்கிகள் வைத்திருந்தனர் என்றும் கூறினார் . அவர்களிடம் கைப்பற்றிய டைரியில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்குவோம் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. மேலும் அங்கு தேடுதல் வேட்டை நடக்கிறது என்று தெரிவித்தார்….
source: dinasuvadu.com
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024